சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
By: Monisha Mon, 03 Aug 2020 1:03:53 PM
சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மேலும் 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 57 ஆயிரத்து 613 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் நேற்று மட்டும் புதிதாக 1,065 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 1,01,951 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று காலை நிலவரப்படி மேலும், 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 7 பேரும், கேஎம்சி மருத்துவமனையில் 3 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 2 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.