Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐ போன் தயாரிப்பு தொழிற்சாலையில் நடந்த வன்முறையில் 125 பேர் கைது

ஐ போன் தயாரிப்பு தொழிற்சாலையில் நடந்த வன்முறையில் 125 பேர் கைது

By: Nagaraj Sun, 13 Dec 2020 3:32:27 PM

ஐ போன் தயாரிப்பு தொழிற்சாலையில் நடந்த வன்முறையில் 125 பேர் கைது

கர்நாடகத்தில் விஸ்ட்ரான் ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாகத் தொழிலாளர்கள் 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகத்தில் ஐபோன் தயாரிக்கும் தொழிற்சாலையில் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாகத் தொழிலாளர்கள் 125 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் நரசபுராவில் உள்ள தொழிற்பேட்டையில் தைவான் நாட்டைச் சேர்ந்த விஸ்ட்ரான் நிறுவனத்தின் ஐபோன் தொழிற்சாலை உள்ளது.

arrest,workers,iphone,factory,one week ,கைது, தொழிலாளர்கள், ஐபோன், தொழிற்சாலை, ஒரு வாரம்

இந்தத் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஒப்புக்கொண்டதைவிடக் குறைவான தொகை ஊதியம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் இரும்புக் கம்பிகளால் சன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன் வாகனங்களையும் சேதப்படுத்தினர்.

வன்முறையை அடுத்து ஒரு வாரக் காலம் தொழிற்சாலை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினர், வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தொழிலாளர்கள் 125 பேரைக் கைது செய்துள்ளனர்.

Tags :
|
|