Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுவன் பலி - தஞ்சையில் சோகம்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுவன் பலி - தஞ்சையில் சோகம்

By: Monisha Sun, 28 June 2020 6:17:16 PM

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுவன் பலி - தஞ்சையில் சோகம்

கொரோனா வைரசால் கடந்த சில நாட்களாக தினந்தோறும் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பலியானவர்கள் பெரும்பாலும் 50 வயதுக்கு மேலானவர்களாகவே இருந்தனர். அவர்களுக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் உள்பட ஒரு சில நோய்கள் இருந்ததாகவும் கூறப்பட்டது. இளவயதினர் கொரோனா வைரஸால் மிக அரிதாகவே பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஓரளவு நம்பிக்கையுடன் இருந்தனர்.

coronavirus,tamil nadu,vulnerability,treatment,death ,கொரோனா வைரஸ்,தமிழ்நாடு,பாதிப்பு,சிகிச்சை,பலி

ஆனால் தஞ்சையில் 13 வயது சிறுவன் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவன் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து அந்த சிறுவன் மரணம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுவன் கொரோனாவால் மரணம் அடைந்திருப்பது பெரும் அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது.

Tags :