Advertisement

சென்னை வருவதற்கு ஒரே நாளில் 14,300 இ-பாஸ்கள் விநியோகம்

By: Monisha Wed, 19 Aug 2020 09:53:45 AM

சென்னை வருவதற்கு ஒரே நாளில் 14,300 இ-பாஸ்கள் விநியோகம்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் சென்னை வருவதற்கு நேற்று மட்டும் 14,300 இ-பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளது.

இ-பாஸ் நடைமுறை தளர்வு அமலுக்கு வந்ததை அடுத்து அத்தியாவசிய காரணங்களுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஆன்லைனில் விண்ணப்பித்தோருக்கு உடனுக்குடன் இ-பாஸ் வழங்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

வெளி மாவட்டங்களில் இருந்து நேற்று ஏராளமானோர் வாகனங்களில் சென்னையை நோக்கி படையெடுத்தனர்.

chennai,e pass,outer district,vehicles,police ,சென்னை,இ பாஸ்,வெளி மாவட்டம்,வாகனங்கள்,போலீஸ்

இ-பாஸ் எளிதாக கிடைத்ததாலும், போலீஸ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் கெடுபிடி இல்லாததாலும் மக்கள் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொண்டனர்.

இந்நிலையில் தமிழகத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் என்ற நடைமுறை அமலுக்கு வந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் சென்னை வருவதற்கு நேற்று 14,300 இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

Tags :
|