Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கிணற்றில் நீச்சல் பழக சென்ற 2 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலி

கிணற்றில் நீச்சல் பழக சென்ற 2 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலி

By: Monisha Fri, 06 Nov 2020 2:52:06 PM

கிணற்றில் நீச்சல் பழக சென்ற 2 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலி

சேலம் அருகே கிணற்றில் நீச்சல் பழக சென்ற மாணவர்கள் 2 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியை சேர்ந்த விவசாயி பழனிசாமி. இவருடைய மகன் ருத்ரமூர்த்தி (வயது 12). அதே பகுதியை சேர்ந்தவர் வேங்கையன். இவரின் மகன் விஷ்வா (12). நண்பர்களான இருவரும் பள்ளி விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணி அளவில் அதே பகுதியில் உள்ள ஒருவரின் விவசாய தோட்டத்து கிணற்றுக்கு நீச்சல் பழக சென்றனர்.

அங்கு அவர்கள் கிணற்றின் அருகே ஆடைகளை கழற்றி வைத்து விட்டு கிணற்றில் குதித்து உள்ளனர். ஆனால் நீச்சல் சரியாக தெரியாததால் எதிர்பாராவிதமாக மாணவர்கள் இருவரும் கிணற்றில் மூழ்கி இறந்து விட்டனர்.

well,swimming,boys,kills,investigation ,கிணறு,நீச்சல்,சிறுவர்கள்,பலி,விசாரணை

இதற்கிடையே, மதியம் வீட்டை விட்டு சென்ற மாணவர்கள் நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால் அவர்களின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர். இரவு 9 மணியளவில் கிணற்றின் அருகே அந்த சிறுவர்களின் செருப்பு மற்றும் உடைகள் இருப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் சிறுவர்களின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே அங்கு சென்ற அந்த மாணவர்களின் பெற்றோர் கிணற்றின் அருகே கிடந்த துணி மற்றும் செருப்பு தங்களின் மகன்களுக்கு உரியது தான் என உறுதிப்படுத்தினர். இதையடுத்து மாணவர்கள் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று கருதிய அந்த பகுதி இளைஞர்கள் சிலர் கிணற்றில் குதித்து மாணவர்கள் ருத்ரமூர்த்தி, விஷ்வா ஆகியோரின் உடல்களை மீட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களின் உடல்களை கைப்பற்றி ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
|
|
|