போதைப்பொருள் விவகாரத்தில் மேலும் 2 நடிகைகள் கைது; கன்னட திரையுலகில் பரபரப்பு
By: Monisha Wed, 21 Oct 2020 11:39:36 AM
போதைப்பொருள் விவகாரத்தில் ஏற்கனவே ஒரு சில நடிகைகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சின்னத்திரை நடிகை ஒருவரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக கன்னட நடிகைகள் சஞ்சனா கல்ராணி மற்றும் ராகினி திவேதி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த விவகாரத்தில் ஒரு சில நடிகைகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை செய்து வந்தனர்.
இந்த நிலையில் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும் நடிகையுமான ஆதம் பாஷா என்பவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் இவர் பிரபல தொலைக்காட்சி நடிகை அனிகா என்பவரிடம் போதைப்பொருள் பெற்றதாகவும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு தகவல்கள் வெளிவந்தது
இதனை அடுத்து டிவி சீரியல் நடிகை அனிகா மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் ஆதம் பாஷா ஆகிய இருவரையும் கைது செய்து, போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் இருவரிடமும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.