Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் உயிரிழப்பு; போலீஸ் விசாரணை

ரயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் உயிரிழப்பு; போலீஸ் விசாரணை

By: Monisha Mon, 28 Dec 2020 3:28:58 PM

ரயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் உயிரிழப்பு; போலீஸ் விசாரணை

இன்று காலை திருச்சி மாவட்டம் மணப்பாறை ரயில் நிலையத்திலிருந்து சிறிது தொலைவில் பூசாரிக்களம் என்ற பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு வாலிபர்கள் உடல் சிதறி இறந்து கிடந்தனர். இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததுடன் உடனடியாக இது குறித்து திருச்சி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை பார்வையிட்டனர்.

மேலும் இறந்தவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தது மணப்பாறை அண்ணாவி நகரை சேர்ந்த சந்தோஷ்(வயது 18) மற்றும் பூமாலைப்பட்டியை சேர்ந்த சகாயம் மகன் ஜேம்ஸ்(20) என்பது தெரியவந்தது. நெருங்கிய நண்பர்களான இருவரும் எப்படி இறந்தார்கள் என்று தெரியவில்லை.

train,rail,teenagers,casualties,investigation ,ரயில்,தண்டவாளம்,வாலிபர்கள்,உயிரிழப்பு,விசாரணை

நேற்றிரவு பூசாரிக்களம் பகுதியில் தண்டவாளத்தை கடந்த போது அந்த வழியாக வந்த ரயிலில் அடிப்பட்டு இறந்தனரா அல்லது ஏதாவது பிரச்சினை காரணமாக ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தனரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரது உடலையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ரயிலில் அடிப்பட்டு நண்பர்கள் இரண்டு பேர் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பேரின் உடல்களையும் பார்த்து அவர்களது உறவினர்கள் கதறி அழுதது பொதுமக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

Tags :
|
|