Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுரை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று...ஒரேநாளில் 259 பேர் பாதிப்பு

மதுரை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று...ஒரேநாளில் 259 பேர் பாதிப்பு

By: Monisha Thu, 02 July 2020 3:09:38 PM

மதுரை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று...ஒரேநாளில் 259 பேர் பாதிப்பு

மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 2,858 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 259 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 3 ஆயிரத்து 807 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 94 ஆயிரத்து 49 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலம் முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 52 ஆயிரத்து 926 அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,264 ஆக உயர்ந்துள்ளது.

coronavirus,influence,kills,treatment,curfew ,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை,ஊரடங்கு

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 2,858 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 259 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,117 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 878 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ஜூலை 5-ம் தேதி நள்ளிரவு வரை முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

Tags :
|