Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சேலம் மாவட்டத்தில் புதிதாக 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சேலம் மாவட்டத்தில் புதிதாக 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Tue, 22 Sept 2020 12:18:26 PM

சேலம் மாவட்டத்தில் புதிதாக 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் குணமடைவோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. மாநிலத்தில் நோய் தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 47 ஆயிரத்து 337 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 495 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, கோவை, கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

salem district,corona virus,infection,treatment,death ,சேலம் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 291 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று 295 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் மட்டும் கொரோனாவுக்கு 16 ஆயிரத்து 790 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனிடையே கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 2 முதியவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மேலும் சேலத்தை சேர்ந்த 70 வயதுடைய முதியவர் சிகிச்சை பலனின்றி தனியார் ஆஸ்பத்திரியில் பலியானார். ஆனாலும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 361 பேர் குணமடைந்து விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

Tags :