Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உத்தர பிரதேசத்தில் சிறுமி கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது

உத்தர பிரதேசத்தில் சிறுமி கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது

By: Karunakaran Mon, 17 Aug 2020 6:20:39 PM

உத்தர பிரதேசத்தில் சிறுமி கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது

உத்தர பிரதேசம் மாநிலத்தின் லக்கிம் கெரி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமை அன்று வயலுக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகி சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.

அபோது சிறுமி அங்குள்ள கரும்பு தோட்டத்தில் இறந்து கிடந்துள்ளார். அதன்பின், 3 பேர் சிறுமியை கற்பழித்து, கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது. பின்னர் இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி, போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனர்.

teenager,arrested,raping,uttar pradesh ,டீனேஜர், கைது, கற்பழிப்பு, உத்தரப்பிரதேசம்

தற்போது இறந்த சிறுமியின் தொண்டை மற்றும் கண்ணில் காயம் இருந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுமி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது உறுதியாகி உள்ளதாகவும், அவளது தொண்டை, கண்களில் காயம் எதுவும் இல்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உத்தர பிரதேசம் மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. அரசின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு சிறுமியின் கொலை சான்றாக உள்ளதாக காங்கிரஸ், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் போன்ற எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|