Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோயம்பேடு மார்க்கெட்டில் 3 மடங்கு காய்கறிகள் விலை உயர்வு

கோயம்பேடு மார்க்கெட்டில் 3 மடங்கு காய்கறிகள் விலை உயர்வு

By: Monisha Sun, 29 Nov 2020 12:47:26 PM

கோயம்பேடு மார்க்கெட்டில் 3 மடங்கு காய்கறிகள் விலை உயர்வு

சென்னையில் அமைந்துள்ள கோயம்பேடு மார்க்கெட் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு பிரதான காய்கறி விற்பனை செய்யப்படும் மார்க்கெட்டாக விளங்குகிறது. இந்தநிலையில், நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை எதிரொலியால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறி வரத்து குறைந்து உள்ளது.

இனத்தனிடையே, இன்று கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை மற்றும் இன்றைய தினம் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதனால், இன்று பெரும்பாலான வீடுகளில் இறைச்சியை தவிர்த்து காய்கறிகள் வாங்குவார்கள். இத்தகைய காரணங்களால், கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று காய்கறிகள் விலை 2 மடங்கு முதல் 3 மடங்கு வரை திடீரென கடுமையாக உயர்ந்தது.

koyambedu,market,vegetables,prices,festival ,கோயம்பேடு,மார்க்கெட்,காய்கறிகள்,விலை,திருவிழா

அதன்படி, கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று முன்தினம் கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட பச்சை மிளகாய் விலை உயர்ந்து நேற்று ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போன்று பெரும்பாலான காய்கறிகள் நேற்று அதிகவிலைக்கு விற்பனை செய்யப்பட்டன.

இதே போன்று நேற்றுமுன்தினம் ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கட்டு வாழை இலையானது நேற்று ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. 2 நாட்களாக கீரைகள் மார்க்கெட்டுக்கு வரவில்லை. இதனால், ரூ.5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கட்டு மல்லிக்கீரை ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|