Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா உட்பட 34 பேர் திடீர் கைது

இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா உட்பட 34 பேர் திடீர் கைது

By: Monisha Tue, 22 Dec 2020 4:50:48 PM

இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா உட்பட 34 பேர் திடீர் கைது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சுசைனாகான் உள்பட 34 பேர் திடீரென கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாடெங்கிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பல கட்டுப்பாடுகள் மத்திய மற்றும் மாநில அரசால் விதிக்கப்பட்டுள்ளன. தனி மனித இடைவெளியை பின்பற்றுதல், மாஸ்க் அணிதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் மும்பையில் உள்ள கிளப் ஒன்றில் இருக்கும் உறுப்பினர்கள் கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறி செயல்படுவதாக தகவல் வந்ததையடுத்து மும்பை போலீசார் திடீரென அந்த கிளப்பில் ரெய்டு நடத்தினர்.

suresh raina,corona virus,club,violation,arrest ,சுரேஷ் ரெய்னா,கொரோனா வைரஸ்,கிளப்,விதிமுறை மீறல்,கைது

அப்போது அரசு அறிவித்திருந்த கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறியதாக 34 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, பாடகர் குரு ரந்தவா மற்றும் ஹிருத்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சுசைனாகான் ஆகியோர்களும் அடங்குவர்.

கைது செய்யப்பட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் சுரேஷ் ரெய்னா கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|