Advertisement

சென்னையில் கொரோனாவுக்கு 3,702 பேர் சிகிச்சை; 3,854 பேர் பலி

By: Monisha Wed, 02 Dec 2020 3:28:54 PM

சென்னையில் கொரோனாவுக்கு 3,702 பேர் சிகிச்சை; 3,854 பேர் பலி

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை விட சென்னைதான் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஆனால் தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகளவில் குறைந்துள்ளது.

சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்து 739 ஆக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 3,702 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,08,183 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி 3,854 பேர் பலியாகியுள்ளனர்.

chennai,corona virus,infection,treatment,kills ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 365 பேர்
அண்ணா நகர் - 386 பேர்
தேனாம்பேட்டை - 332 பேர்
தண்டையார்பேட்டை - 196 பேர்
ராயபுரம் - 228 பேர்
அடையாறு- 404 பேர்
திரு.வி.க. நகர்- 359 பேர்
வளசரவாக்கம்- 295 பேர்
அம்பத்தூர்- 296 பேர்
திருவொற்றியூர்- 87 பேர்
மாதவரம்- 197 பேர்
ஆலந்தூர்- 164 பேர்
பெருங்குடி- 163 பேர்
சோழிங்கநல்லூர்- 86 பேர்
மணலி - 65 பேர்

Tags :