Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கால்நடை மருத்துவம் பயில விண்ணப்பித்த 3,901 பேர் தகுதி; உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

கால்நடை மருத்துவம் பயில விண்ணப்பித்த 3,901 பேர் தகுதி; உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

By: Monisha Wed, 18 Nov 2020 4:47:14 PM

கால்நடை மருத்துவம் பயில விண்ணப்பித்த 3,901 பேர் தகுதி; உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்), உணவு, கோழியின மற்றும் பால்வளத் தொழில்நுட்பப் பட்டப்படிப்புகள் (பி.டெக்) பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.

பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் இந்த படிப்புகளுக்கு மாணவா் சேர்க்கை நடைபெறுகிறது. 2020 - 21-ம் ஆண்டு மாணவா் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் அக்டோர் 9 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. மொத்தம், 15 ஆயிரத்து 580 விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் சமா்ப்பிக்கப்பட்டன. அவை பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு வந்த நிலையில், தகுதியான 13,901 பேருக்கான தரவரிசைப்பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

veterinary medicine,graduation,admission,minister,udumalai radhakrishnan ,கால்நடை மருத்துவம்,பட்டப்படிப்பு,மாணவா் சேர்க்கை,அமைச்சர்,உடுமலை ராதாகிருஷ்ணன்

இந்நிலையில் கால்நடை மருத்துவம் பயில விண்ணப்பித்த 15 ஆயிரம் பேரில், 13,901 விண்ணப்பங்கள் தகுதி பெற்றுள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.

மேலும், கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் பிவிஎஸ்சி பிரிவில் கன்னியாகுமரியைச் சேர்ந்த விஷ்ணுமாயா முதலிடம் பிடித்துள்ளார். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தர் இரண்டாம் இடத்தையும், கோவையைச் சேர்ந்த கோகிலா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

பி.டெக்., பிரிவில் தர்மபுரியைச் சேர்ந்த சிவகனி முதலிடத்தையும், நாமக்கல்லைச் சேர்ந்த ரித்தி இரண்டாவது இடத்தையும், விழுப்புரத்தைச் சேர்ந்த நிவேதா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர் என்று கூறினார்.

Tags :