Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவேக்சின் தடுப்பூசியின் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனை; 26 ஆயிரம் பேருக்கு செலுத்தப்படுகிறது!

கோவேக்சின் தடுப்பூசியின் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனை; 26 ஆயிரம் பேருக்கு செலுத்தப்படுகிறது!

By: Monisha Sat, 24 Oct 2020 08:27:03 AM

கோவேக்சின் தடுப்பூசியின் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனை; 26 ஆயிரம் பேருக்கு செலுத்தப்படுகிறது!

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக இந்தியாவில் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் (ஐ.சி.எம்.ஆர்.) சேர்ந்து 'கோவேக்சின்' என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர்.

இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கிற முதல் இரு கட்ட மருத்துவ பரிசோதனைகள் முடிந்து விட்டன. இந்த சோதனைகளில் தடுப்பூசியினால் பெரிதான பக்க விளைவுகள் ஏதுமில்லை, பாதுகாப்பானது என தெரியவந்தது.

corona virus,vaccine,covaxin,test,icmr ,கொரோனா வைரஸ்,தடுப்பூசி,கோவேக்சின்,பரிசோதனை,ஐ.சி.எம்.ஆர்

அதைத் தொடர்ந்து 3-வது கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்துவதற்கு ஒப்புதல் வழங்குமாறு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் பாரத் பயோடெக் கடந்த 2-ந்தேதி விண்ணப்பித்தது. அதை பரிசீலித்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தனது ஒப்புதலை வழங்கி உள்ளது.

அதைத் தொடர்ந்து நாட்டின் 25 மையங்களில், 'கோவேக்சின்' தடுப்பூசியின் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனை நடைபெற உள்ளது. இதில் 26 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்படுகிறது.

Tags :
|