Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 3 மாவட்டங்களில் புதிதாக 42 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

3 மாவட்டங்களில் புதிதாக 42 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

By: Monisha Mon, 16 Nov 2020 09:45:02 AM

3 மாவட்டங்களில் புதிதாக 42 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் புதிதாக 42 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. நெல்லையில் நேற்று புதிதாக 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 603 ஆக உயர்ந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 937 ஆக உயர்ந்துள்ளது.

nellai,tenkasi,thoothukudi,corona virus,infection ,நெல்லை,தென்காசி,தூத்துக்குடி,கொரோனா வைரஸ்,பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 467 ஆக அதிகரித்து உள்ளது.

இதில் 15 ஆயிரத்து 58 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 274 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 135 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்துள்ளனர்.

Tags :
|