Advertisement

மதுரையில் புதிதாக 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Wed, 11 Nov 2020 10:21:07 AM

மதுரையில் புதிதாக 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 136 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. மாநிலத்தில் இதுவரை வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 48 ஆயிரத்து 225 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 18 ஆயிரத்து 709 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பரவலை தடுக்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று குறைந்து வருகிறது.

madurai,corona virus,infection,treatment,deaths ,மதுரை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

மதுரையில் நேற்று புதிதாக 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 35 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 136 ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் மதுரையில் நேற்று 27 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 287 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 425 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். மதுரையில் கடந்த 3 தினங்களாக கொரோனாவுக்கு யாரும் பலியாகவில்லை.

Tags :