கடந்த 24 மணிநேரத்தில் பாகிஸ்தானில் 6,472 பேருக்கு கொரோனா பாதிப்பு
By: Nagaraj Sun, 14 June 2020 08:19:08 AM
கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் 6,472 பேரிடம் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,551 பேர் பலியாகி உள்ளனர். இங்கு கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதுகுறித்து, சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த, 24 மணி நேரத்தில், 29 ஆயிரத்து, 850 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டதில் இதுவரை இல்லாத வகையில் 6,472 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 405 ஆக உயர்ந்துள்ளது.
வைரஸ் பாதிப்பினால், 88 பேர் பலியாகி உள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை, 2,551 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கையில் 50 ஆயிரத்து, 87 பேருடன், பஞ்சாப் மாகாணம் முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக, 49 ஆயிரத்து, 256 பேருடன் சிந்து மாகாணம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
நாடு முழுதும் உள்ள 820 மருத்துவமனைகளில், 8,559 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ளவர்கள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.