Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சேலம் மாவட்டத்தில் புதிதாக 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சேலம் மாவட்டத்தில் புதிதாக 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Sat, 05 Dec 2020 5:12:05 PM

சேலம் மாவட்டத்தில் புதிதாக 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது அந்தவகையில் சேலம் மாவட்டத்திலும் கொரோனாவின் பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 88 பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் புதிதாக 75 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 35 பேர், தாரமங்கலத்தில் 6 பேர், காடையாம்பட்டி, வீரபாண்டி ஆகிய பகுதிகளில் தலா 5 பேர், கொளத்தூர், ஓமலூர் ஆகிய பகுதிகளில் தலா 4 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 3 பேர், எடப்பாடி, சேலம் ஒன்றியம், ஆத்தூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், மேட்டூர், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

salem,corona virus,infection,treatment,kills ,சேலம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

மேலும், நாமக்கல்லில் இருந்து சேலம் வந்த 2 பேர், கோவையில் இருந்து சேலம் வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 166 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 82 பேர் குணமடைந்துவிட்டதால் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர்.

Tags :
|