Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விஜயவாடாவில் கொரோனா வார்ட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் 9 நோயாளிகள் பலி

விஜயவாடாவில் கொரோனா வார்ட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் 9 நோயாளிகள் பலி

By: Nagaraj Sun, 09 Aug 2020 3:47:33 PM

விஜயவாடாவில் கொரோனா வார்ட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் 9 நோயாளிகள் பலி

விஜயவாடாவில் கொரோனா வார்ட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் 9 நோயாளிகள் பலியாகி உள்ளனர்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொகுசு ஓட்டல் ஒன்று கொரோனா வார்டாக மாற்றப்பட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. ஐந்து மாடி கொண்ட அந்த சொகுசு ஓட்டலில் இன்று (ஆகஸ்ட் 9) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஓட்டலில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்குத் தனது ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

andhra,corona ward,fire,vijayawada ,ஆந்திரா, கொரோனா வார்டு, தீவிபத்து, விஜயவாடா

அதேபோல் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர். மேலும் சொகுசு ஓட்டலில் மூன்றாவது மாடியில் கொரோனா தொற்று சிகிச்சையிலிருந்த 10 நோயாளிகள் மாடியிலிருந்து குதித்து உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தீ விபத்தில் பலர் சிக்கி இருக்கலாம் என்ற அச்சத்தில் அவர்களை மீட்கும் பணியில் காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags :
|
|