Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கொரோனாவுக்கு 9 ஆயிரத்து 880 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் கொரோனாவுக்கு 9 ஆயிரத்து 880 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

By: Monisha Thu, 17 Dec 2020 07:41:47 AM

தமிழகத்தில் கொரோனாவுக்கு 9 ஆயிரத்து 880 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளது. தினந்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மாநிலத்தில் நேற்று புதிதாக 1 ஆயிரத்து 181 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 2 ஆயிரத்து 342 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் தற்போது 9 ஆயிரத்து 880 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1 ஆயிரத்து 240 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 80 ஆயிரத்து 531 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், நேற்று 12 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 931 ஆக உயர்ந்துள்ளது.

tamil nadu,corona virus,infection,treatment,deaths ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-
அரியலூர் - 11
செங்கல்பட்டு - 499
சென்னை - 3,093
கோவை - 1,051
கடலூர் - 87
தர்மபுரி - 96
திண்டுக்கல் - 158
ஈரோடு - 348
கள்ளக்குறிச்சி - 16
காஞ்சிபுரம் - 233
கன்னியாகுமரி - 198
கரூர் - 98
கிருஷ்ணகிரி - 150
மதுரை - 279
நாகை - 116
நாமக்கல் - 197
நீலகிரி - 139
பெரம்பலூர் - 6
புதுக்கோட்டை - 81
ராமநாதபுரம் - 28
ராணிப்பேட்டை - 82
சேலம் - 448
சிவகங்கை - 55
தென்காசி - 36
தஞ்சாவூர் - 129
தேனி - 69
திருப்பத்தூர் - 33
திருவள்ளூர் - 444
திருவண்ணாமலை - 110
திருவாரூர் - 122
தூத்துக்குடி - 117
திருநெல்வேலி - 140
திருப்பூர் - 567
திருச்சி - 154
வேலூர் - 301
விழுப்புரம் - 88
விருதுநகர் - 88
விமானநிலைய கண்காணிப்பு - 3

Tags :