Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Wed, 30 Sept 2020 10:31:37 AM

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவால் 11,586 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,91,943 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,36,209 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9,453 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 46,281 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

villupuram district,corona virus,infection,treatment,kills ,விழுப்புரம் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, கோவை, கடலூர், திருவள்ளூர், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்றுவரை கொரோனாவால் 11,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 10,524 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 964 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 98 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 93 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,679-ஆக உயர்ந்துள்ளது.

Tags :