டில்லி-பெங்களூர் விமானத்தில் தனியாக பயணம் செய்து வந்த சிறுவன்
By: Nagaraj Tue, 26 May 2020 09:01:46 AM
இரண்டு மாதங்களாக பிரிந்திருந்த தாயை பார்க்க சிறப்பு பயணியாக 5 வயது சிறுவன் டில்லியில் இருந்து பெங்களூரு வந்து சேர்ந்துள்ளான்.
இந்தியாவில் உள்நாட்டு விமான போக்குவரத்து நேற்று முதல் துவங்கியது. இதில் பெங்களூரு விமான நிலையத்தில் பல விமானங்களில் பலர் வந்திறங்கினாலும் ஒரு நபரை பலரும் வியப்புடன் பார்த்தனர்.காரணம் அந்த பயணி ஒரு சிறுவன் என்பது மட்டுமின்றி, அவனட தனியாக பயணம் செய்து வந்தான் என்பதுதான்.
அந்த சிறுவன் விஹான் சர்மா. வயது 5. டில்லியில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமானத்தில் விஹான் சர்மா தனியாளாக வந்தான். விமான நிலையத்தில் அவனை தாய் மன்ஜீஸ் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வீட்டுக்கு கூட்டிச் சென்றார்.
டில்லியில் தாத்தா வீட்டில் விட்டு வந்த மகனை 2 மாதம் கழித்து பார்த்த மகிழ்ச்சியில் திளைத்து விட்டார் தாய். டில்லியில் தாத்தா, பாட்டி விமானம் ஏற்றி விட துணிச்சலாக சிறப்பு பயணியாக வந்து சேர்ந்துள்ளான் விஹான் சர்மா.