Advertisement

இலங்கையில் மேலும் 211 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது

By: Nagaraj Wed, 28 Oct 2020 8:31:22 PM

இலங்கையில் மேலும் 211 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது

211 பேருக்கு கொரோனா... நாட்டில் மேலும் 211 பேருக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள ஒன்பது பேருக்கும் மற்றும் முன்னைய தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 202 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று பரவியுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களில் 140 பேர் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் இருந்து பதிவாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் பதிவாகியுள்ள மொத்த வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்து 607 ஆக அதிகரித்துள்ளது.

corona,treatment,hospital,number,987 persons ,கொரோனா, சிகிச்சை, வைத்தியசாலை, எண்ணிக்கை, 987 பேர்

இந்நிலையில், நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்து 81ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நான்காயிரத்து 75 பேர் குணமடைந்துள்ள நிலையில் இன்னும் நான்காயிரத்து 987 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் 19 பேர் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|