Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெங்களூரில் ஆன்லைன் மூலம் ஆடைகள் வாங்க முயன்று ரூ.4¼ லட்சத்தை இழந்த இளம்பெண்

பெங்களூரில் ஆன்லைன் மூலம் ஆடைகள் வாங்க முயன்று ரூ.4¼ லட்சத்தை இழந்த இளம்பெண்

By: Karunakaran Wed, 15 July 2020 1:30:50 PM

பெங்களூரில் ஆன்லைன் மூலம் ஆடைகள் வாங்க முயன்று ரூ.4¼ லட்சத்தை இழந்த இளம்பெண்

பெங்களூரு தலகட்டபுரா அருகே ரிங்கி டாகோர் என்ற 25 வயது இளம்பெண் வசித்து வருகின்றார். இந்நிலையில் ஆன்லைனில் ஆடைகள் வாங்க நினைத்து, ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி தனக்கு பிடித்த ஆடைகளையும் ரிங்கி ஆர்டர் செய்திருந்தார்.

குறிப்பிட்ட நாளுக்குள் அந்த ஆடைகள் வராததால் வாடிக்கையாளர் சேவை மைய எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். எதிர்முனையில் பேசிய மர்மநபர், நீங்கள் ஆர்டர் செய்த விவரங்கள், எந்த வங்கியில் இருந்து பணம் செலுத்தினீர்கள், ஏ.டி.எம். கார்டின் எண் போன்ற விவரங்களை குறுந்தகவல் மூலம் அனுப்ப கூறியுள்ளார்.

bangalore,online,cloth,teenager ,பெங்களூர், ஆன்லைன், துணி, டீனேஜர்

ரிங்கியும் மர்மநபர் கேட்ட அனைத்து விவரங்களையும் குறுந்தகவல் மூலம் அனுப்பி வைத்துள்ளார். அனுப்பிய சில நிமிடங்களியே ரிங்கியின் வங்கி கணக்கில் இருந்த ரூ.4 லட்சத்து 37 ஆயிரம் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் எடுக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதன்பின், அந்த மர்மநபர் தனது வங்கி கணக்கு, ஏ.டி.எம். கார்டு எண் மூலம் பணத்தை எடுத்து மோசடி செய்திருப்பதை ரிங்கி உணர்ந்து, இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags :
|
|