Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் தலைமறைவு

10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் தலைமறைவு

By: Monisha Tue, 01 Dec 2020 3:05:57 PM

10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் தலைமறைவு

10-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி. இவரது மகள் (வயது 16) கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 21-ந் தேதி பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த அந்த சிறுமியிடம், அதே பகுதியை சேர்ந்த கோழிப்பண்ணையில் வேலை செய்யும் மதன்(25) என்பவர், தனது இருசக்கர வாகனத்தில், வீட்டிற்கு போகலாம் வா என அழைத்து கொண்டு சென்றார்.

rape,teenager,police,pocso,complaint ,பாலியல் பலாத்காரம்,வாலிபர்,போலீசார்,போக்சோ,புகார்

அப்போது போகும் வழியில் உள்ள தானம்பட்டி மலைப்பகுதிக்கு அழைத்து சென்று, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதே போல் அடிக்கடி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமி வற்புறுத்தியுள்ளார். ஆனால் தற்போது மதன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி நேற்று கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சவிதா, போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மதனை தேடி வருகிறார்.

Tags :
|
|
|