Advertisement

முன்னாள் ஜனாதிபதியிடம் மூன்று மணிநேரம் விசாரணை

By: Nagaraj Sat, 17 Oct 2020 4:57:08 PM

முன்னாள் ஜனாதிபதியிடம் மூன்று மணிநேரம் விசாரணை

3 மணிநேரம் விசாரணை... முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சுமார் 3 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

நான்காவது நாளாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (சனிக்கிழமை) முற்பகல் ஆஜராகியி, வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இறுதியாக நேற்று முன்தினம் (15) ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கிய அவர், பல்வேறு முரணான வாக்குமூலங்களை வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

presence,testimony,ex-president,trial,summons ,முன்னிலை, சாட்சியம், முன்னாள் ஜனாதிபதி, விசாரணை, அழைப்பு

மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் எதிர்வரும் ஒக்டோபர் 22ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஏற்கனவே மைத்திரிபால சிறிசேன, ஒக்டோபர் 5 மற்றும் ஒக்டோபர் 12ம் திகதிகளில் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியத்தை வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|