Advertisement

ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பெற்றெடுத்த இளம்பெண்

By: Nagaraj Fri, 22 May 2020 4:56:46 PM

ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பெற்றெடுத்த இளம்பெண்

இலங்கை அம்பாறை – கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட இளம் பெண்ணுக்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது.

கோமாரி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று (வியாழக்கிழமை) குறித்த பகுதியிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து. திருக்கோவில், அக்கரைப்பற்று வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.

அதன்பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு சத்திர சிகிச்சை மூலம் 3 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். தற்போது தாயும், குழந்தைகளும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

adolescent,three children,childbirth,hospital,wellness ,இளம்பெண், மூன்று குழந்தைகள், பிரசவம், வைத்தியசாலை, நலம்

குறித்த சத்திர சிகிச்சையினை மகப்பேற்று வைத்திய நிபுணர் ராஜிவ் விதானகே தலைமையிலான வைத்திய குழுவினர் மேற்கொண்டனர்.
இதில் மூன்று ஆண் குழந்தைகளும் தலா 1800 கிராம், 2190 கிராம், 2240 கிராம் எடையுடன் ஆரோக்கியமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கடந்த மாதமும் இதே வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை நிந்தவூரை சேர்ந்த பெண்மணி ஒருவர் பெற்றெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Tags :