Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பங்களாவை இடித்ததற்கு ரூ.2 கோடி இழப்பீடு கோரி நடிகை கங்கனா மனு தாக்கல்

பங்களாவை இடித்ததற்கு ரூ.2 கோடி இழப்பீடு கோரி நடிகை கங்கனா மனு தாக்கல்

By: Karunakaran Wed, 16 Sept 2020 4:59:12 PM

பங்களாவை இடித்ததற்கு ரூ.2 கோடி இழப்பீடு கோரி நடிகை கங்கனா மனு தாக்கல்

நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கில் மும்பை போலீசார் குறித்து நடிகை கங்கனா ரணாவத் விமர்சனம் செய்தார். அதன்பின், மும்பையை ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் உணருவதாக கூறினார். இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தை ஆளும் சிவசேனா கட்சிக்கும் அவருக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த மோதலுக்கு பின், நடிகை கங்கனா ரணாவத்தின் மும்பை பங்களாவின் ஒரு பகுதியை மும்பை மாநகராட்சி நிர்வாகம் கடந்த 9-ந்தேதி இடித்தது. இதற்கு எதிராக மும்பை ஐகோர்ட்டில் நடிகை கங்கனா மனுதாக்கல் செய்தார். அதன்பேரில், மேற்கொண்டு இடிப்பதற்கு நீதிபதி கதாவல்லா தலைமையிலான அமர்வு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் அந்த மனுவில், கங்கனா நேற்று திருத்தம் செய்து சமர்ப்பித்தார்.

actress kangana ranaut,compensation,demolition,bungalow ,நடிகை கங்கனா, இழப்பீடு, இடிப்பு, பங்களா

கங்கனா சமர்ப்பித்த மனுவில், பொதுமக்களை பாதிக்கும் சில விஷயங்களை கையாள்வது தொடர்பாக, சமீபத்தில் நான் தெரிவித்த கருத்துகளால், மராட்டிய மாநில அரசுடன் மோதல் ஏற்பட்டது. குறிப்பாக, அரசில் அங்கம் வகிக்கும் ஒரு அரசியல் கட்சியில் இருப்பவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. அந்த கட்சி ஆளுங்கட்சியாக உள்ள மும்பை மாநகராட்சி, என் பங்களாவை இடித்தது. பங்களாவை பழுதுபார்க்க நான் 2018-ம் ஆண்டு அனுமதி பெற்றிருந்தேன். ஆனால், கடந்த 7-ந்தேதி மாநகராட்சி திடீரென நோட்டீஸ் அனுப்பியது. எனவே, பங்களாவை இடிக்க வேண்டும் என்ற உள்நோக்கம் மாநகராட்சியிடம் இருந்துள்ளது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் போதைப்பழக்கம் என்று பேசி, இந்தி திரையுலகின் நற்பெயரை கெடுக்க சிலர் சதி செய்வதாக மாநிலங்களவையில் சமாஜ்வாடி எம்.பி. நடிகை ஜெயா பச்சன் பேசினார். இதுகுறித்து ‘டுவிட்டர்’ பக்கத்தில் நடிகை கங்கனா, எனது இடத்தில் உங்கள் மகள் ஸ்வேதா இருந்தால், நீங்கள் இப்படித்தான் பேசி இருப்பீர்களா? திரையுலகில் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சாட்டி, திடீரென ஒருநாள் தூக்கில் தொங்கியவர், உங்கள் மகன் அபிஷேக் பச்சனாக இருந்தால், நீங்கள் இப்படித்தான் பேசி இருப்பீர்களா? எங்கள் மீதும் கருணை காட்டுங்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags :