Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 6 வருடம் கழித்துத்தான் நான் நடிகை என காங்கிரஸ் கட்சிக்கு தெரிந்ததா? நடிகை குஷ்பு கேள்வி

6 வருடம் கழித்துத்தான் நான் நடிகை என காங்கிரஸ் கட்சிக்கு தெரிந்ததா? நடிகை குஷ்பு கேள்வி

By: Monisha Tue, 13 Oct 2020 1:02:18 PM

6 வருடம் கழித்துத்தான் நான் நடிகை என காங்கிரஸ் கட்சிக்கு தெரிந்ததா? நடிகை குஷ்பு கேள்வி

கட்சியில் இணைந்து 6 வருடம் கழித்துத்தான் நான் நடிகை என காங்கிரஸ் கட்சிக்கு தெரிந்ததா? என நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, தமிழக தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் நேற்று இணைந்தார்.

பாஜகவில் சேர்ந்து டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய குஷ்புவுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை விமான நிலையத்தில் பூக்களை தூவி குஷ்புவை வரவேற்ற பாரதிய ஜனதா கட்சியினர் ஆளுயர மாலையையும் அணிவித்தனர். இதையடுத்து குஷ்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

actress khushboo,question,congress,bjp ,நடிகை குஷ்பு,கேள்வி,காங்கிரஸ்,பாஜக

சிந்திக்க கூடிய மூளை வளர்ச்சியில்லாத கட்சி காங்கிரஸ். காங்கிரசில் இருக்கிறவர்களுக்கும், கட்சியை விட்டு செல்கிறவர்களுக்கும் மரியாதை இல்லை. 6 வருடம் கழித்துத்தான் நான் நடிகை என காங்கிரஸ் கட்சிக்கு தெரிந்ததா?

காங்கிரஸ் கட்சியினர் நடிகையாகத்தான் என்னை பார்த்தனர். எல்.முருகன் எடுத்த முயற்சியால்தான் நான் பாஜகவில் இணைந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :