Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல்

நடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல்

By: Nagaraj Sat, 13 June 2020 7:34:15 PM

நடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல்

பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் காரிலிருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தமிழ், தெலுங்கு என்று இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்யாகிருஷ்ணன். இவர் நடித்த பாகுபலி படங்கள் இவருக்கு மேலும் புகழை சேர்த்தது.

இந்நிலையில் சென்னை ஈசிஆர் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

actress ramyakrishnan,car,liquor,seizure,police ,நடிகை ரம்யாகிருஷ்ணன், கார், மதுபாட்டில், பறிமுதல், போலீசார்

அப்போது அவ்வழியாக வந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் மது பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.

இப்படி பறிமுதல் செய்யப்பட்டதில் 24 பீர் பாட்டில்கள் மற்றும் 8 மதுபாட்டில்கள் இருந்ததாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து கார் ஓட்டுநர் செல்வம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் பின்னர் சில மணி நேரத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சென்னையில் கொரோனா காரணமாக மதுபானக் கடைகள் திறக்க தடை விதிக்கப்படுள்ளது. இதனால் சிலர் சென்னையிலிருந்து அருகில் உள்ள ஊர்களுக்கு சென்று மதுபாட்டில்கள் வாங்கி வருவதைத் தடுக்க சோதனைச் சாவடிகளில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|