Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கூட்ட நெரிசலை தவிர்க்க மேலும் 86 மின்சார ரெயில்கள் கூடுதலாக இயக்கம்

கூட்ட நெரிசலை தவிர்க்க மேலும் 86 மின்சார ரெயில்கள் கூடுதலாக இயக்கம்

By: Monisha Mon, 21 Dec 2020 08:19:05 AM

கூட்ட நெரிசலை தவிர்க்க மேலும் 86 மின்சார ரெயில்கள் கூடுதலாக இயக்கம்

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் ஊழியர்கள், பெண்கள், குழந்தைகளுக்காக மின்சார ரெயில்களும் சென்னையில் இயக்கப்படுகிறது.

மின்சார ரெயில் தேவை அதிகரிப்பால் முதற்கட்டாமாக 40 மின்சார ரெயில் சேவையில் இருந்து 120-ஆக அதிகரிக்கப்பட்டது. பின்னர் சில நாட்களுக்கு பிறகு கூடுதலாக 30 மின்சார ரெயில் சேவை அதிகரிக்கப்பட்டு, 150 சேவைகள் இயக்கப்பட்டது. இதையடுத்து, பெண்கள், குழந்தைகளும் மின்சார ரெயிலில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னையில் மின்சார ரெயில் சேவை 320-ஆக மீண்டும் அதிகரிக்கப்பட்டது.

congestion,electric trains,chennai,southern railway,passengers ,கூட்ட நெரிசல்,மின்சார ரெயில்கள்,சென்னை,தெற்கு ரெயில்வே,பயணிகள்

இந்தநிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்கவும், தொற்று பரவலை தடுக்கவும், சென்னையில் மீண்டும் மின்சார ரெயில் சேவை இன்று முதல் அதிகரிக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரி கூறியதாவது:-

சென்னையில் ஏற்கனவே 320 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், பயணிகளின் வசதிக்காக கூட்ட நெரிசல் இல்லாமல் செல்வதற்காக தற்போது மேலும் கூடுதலாக 86 சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்று முதல் சென்னையில் 406 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படும். விரைவில் வழக்கமான ரெயில் சேவை தொடங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

Tags :