Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அ.தி.மு.க. தேர்தல் பிரச்சாரம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று துவங்கியது

அ.தி.மு.க. தேர்தல் பிரச்சாரம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று துவங்கியது

By: Monisha Sun, 27 Dec 2020 1:09:05 PM

அ.தி.மு.க. தேர்தல் பிரச்சாரம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று துவங்கியது

தமிழக சட்டசபைக்கு வருகிற 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பிலும் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்பட்டுள்ளதால், அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்ற தொடங்கி விட்டனர். கடந்த வாரம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் பெருமாள் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

election,campaign,cm,ground,public meeting ,தேர்தல்,பிரச்சாரம்,முதலமைச்சர்,மைதானம்,பொதுக்கூட்டம்

இதன் அடுத்தக்கட்டமாக எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் இணைந்து அ.தி.மு.க. வின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்கும் கூட்டம் சென்னையில் இன்று காலையில் தொடங்கியது. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இருவரும் பங்கேற்றனர்.

மேலும், இந்த கூட்டத்தின் மூலம் தேர்தல் பிரச்சார பணிகளை துவக்கி வைக்கின்றனர். இந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள், வழிகாட்டுக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

Tags :
|
|