Advertisement

சென்னை-சேலம் இடையே நாளை முதல் மீண்டும் விமான சேவை

By: Monisha Tue, 26 May 2020 10:44:21 AM

சென்னை-சேலம் இடையே நாளை முதல் மீண்டும் விமான சேவை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து துறை போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது மே 31-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி உள்நாட்டு விமான சேவை இந்தியா முழுவது பல்வேறு மாநிலங்களில் நேற்று தொடங்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை-சேலம் இடையே நாளை (புதன்கிழமை) முதல் மீண்டும் விமான சேவை தொடங்குகிறது. 2 மாதங்களுக்கு பிறகு விமான சேவை தொடங்க உள்ள நிலையில் தற்போது விமானம் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

domestic airline,chennai,salem,tamil nadu,curfew ,உள்நாட்டு விமான சேவை,சென்னை,சேலம்,தமிழ்நாடு,ஊரடங்கு

அதன்படி சென்னையில் இருந்து காலை 7.25 மணிக்கு விமானம் புறப்பட்டு, 8.25 மணிக்கு சேலம் சென்று அடையும். பின்னர் காலை 8.55 மணிக்கு அந்த விமானம் சேலத்தில் இருந்து புறப்பட்டு, 9.50 மணிக்கு சென்னையை வந்து அடையும்.

மீண்டும் விமான சேவை தொடங்க உள்ளதால், விமான நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனை சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் நேற்று விமான நிலையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags :
|