விமான நிலைய பிரவேசிப்பு, வெளியேறும் பகுதிகளை மூட நடவடிக்கை
By: Nagaraj Sun, 04 Oct 2020 3:47:04 PM
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் பகுதிகளை நாளை முதல் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
அத்துடன், சுங்கத் தீர்வையற்ற பகுதிக்குள் வெளிநபர்கள் பிரவேசிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத்
தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த
நிலையில், கம்பஹா மாவட்டத்தில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான
நிலையத்திற்கு வேலைக்கு செல்பவர்களையும் மறு அறிவித்தல் வரும் வரையில்
வேலைக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Tags :