Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அத்தனை கட்சிகளும் அ.தி.மு.க.வுக்காக பிரச்சாரம் செய்கிறார்கள்- அமைச்சர் பாண்டியராஜன்

அத்தனை கட்சிகளும் அ.தி.மு.க.வுக்காக பிரச்சாரம் செய்கிறார்கள்- அமைச்சர் பாண்டியராஜன்

By: Monisha Sat, 19 Dec 2020 10:49:16 AM

அத்தனை கட்சிகளும் அ.தி.மு.க.வுக்காக பிரச்சாரம் செய்கிறார்கள்- அமைச்சர் பாண்டியராஜன்

தமிழகத்தில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதன்படி அம்மா மினி கிளினிக் தொடக்க விழா ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவடி சேக்காடு, அண்ணாநகர் தண்டுரை, நெமிலிச்சேரி, திருநின்றவூர் நடுக்குத்தகை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நடந்தது.

அமைச்சர் பாண்டியராஜன், அம்மா மினி கிளினிக் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் மருத்துவர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் அம்பத்தூர் எம்.எல்.ஏ. வி. அலெக்சாண்டர், முன்னாள் அமைச்சர் எஸ். அப்துல் ரஹீம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

mini clinic,opening ceremony,minister,interview,campaign ,மினி கிளினிக்,தொடக்க விழா,அமைச்சர்,பேட்டி,பிரச்சாரம்

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்ததாவது :- தற்போது ஆறு கட்சிகள் எம்.ஜி.ஆர். ஆட்சியை கொண்டு வருவோம் என கூறிக்கொண்டு வருகிறார்கள். தி.மு.க. உள்ளிட்ட ஒரு கட்சிகூட கருணாநிதியின் ஆட்சியை கொண்டு வருவோம் என கூறியது கிடையாது.

எம்.ஜி.ஆரின் பத்தாண்டு ஆட்சியின் தாக்கம் இன்றும் தமிழகத்தில் மிக அதிகமாக இருக்கிறது. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க. வால் மட்டுமே அவரது ஆட்சியை கொடுக்க முடியும். நடிகர் கமல்ஹாசன் உள்பட எம்.ஜி.ஆர். ஆட்சி வரவேண்டும் எனக்கூறும் அத்தனை கட்சிகளும் அ.தி.மு.க.வுக்காக பிரச்சாரம் செய்கிறார்கள் என்று தான் அர்த்தம். அது நல்ல விஷயம்தான். அதை நான் வரவேற்கிறேன் என அவர் கூறினார்.

Tags :