- வீடு›
- செய்திகள்›
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் நலன் கருதி கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் நலன் கருதி கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு
By: Monisha Sat, 12 Sept 2020 09:53:30 AM
தமிழகத்தில் 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ளன. இக்கல்லுரிகளில் உள்ள 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு இந்த ஆண்டு ஒரு லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இதனால் மாணவர்களின் நலன் கருதி அரசு கூடுதலாக இடங்களை ஒதுக்கியுள்ளது.
இதுதொடர்பாக உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:-
அரசு கல்லூரிகளில் 2020-2021-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள காரணத்தால், மாணவ-மாணவிகளின் நலன் கருதி தேவையுள்ள பாடப்பிரிவுகளில் கூடுதலாக மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கு அனுமதி வழங்குமாறு கல்லூரிக்கல்வி இயக்குனர் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
கல்லூரிக்கல்வி இயக்குனரின் இந்த கருத்தை பரிசீலித்த அரசு, 2020-2021-ம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், கலை பாடப்பிரிவுகளுக்கு 20 சதவீதம் கூடுதலாகவும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு 20 சதவீதம் கூடுதலாகவும் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கு அனுமதி அளித்து ஆணையிடுகிறது.
இந்த கூடுதல் மாணவர்கள் சேர்க்கைக்கு சார்ந்த பல்கலைக்கழகங்களின் அனுமதி பெறவேண்டும் எனவும் அரசு உத்தரவிடுகிறது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.