பெய்ரூட் விபத்துக்கு அம்மோனியம் நைட்ரேட் காரணமல்ல... நிபுணர் கருத்தால் பரபரப்பு
By: Nagaraj Tue, 11 Aug 2020 6:57:50 PM
பெய்ரூட்டில் கடந்த 4 ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 200 பேர் உயிரிழந்தனர். உலக நாடுகளை வெகுவாக அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த சம்பவம் நடக்க காரணம் அம்மோனியம் நைட்ரேட் என்று கூறப்பட்டது.
ஆனால் அம்மோனியம் நைட்ரேட் காரணமல்ல என்றும் ராணுவ ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் வெடிபொருளாக இருக்கலாம் என்றும் வெடிபொருள் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இத்தாலியில் பர்மேசன் பகுதியை சேர்ந்த டானிலோ கோப் என்பவர் முன்னணி வெடிபொருள் நிபுணராக அறியப்படுகிறார். பெய்ரூட் வெடி விபத்து தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;
பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்டது அம்மோனியம் நைட்ரேட் இவற்றால் ஏற்பட்ட
வெடி விபத்து அல்ல என்று தெரிவித்துள்ளார். ஏனெனில் அம்மோனியம் நைட்ரேட்
வெடிக்கும்போது ஒரு தெளிவற்ற மஞ்சள் வேகத்தை உருவாக்குகிறது என்று
கூறியுள்ள டானிலோ, வெடிப்பின் வீடியோக்களை பார்க்கும் பொழுது ஆரஞ்சு நிற
புகைகள் அதிகமாக வெளிப்பட்டதாக கூறியுள்ளார்.
வெடிமருந்து கிடங்கில்
ஏதோ ஒரு பொருள் வினை ஊக்கியாக இருந்திருக்க வேண்டும் என்று
குறிப்பிட்டுள்ள அவர், லித்தியம் போன்ற பொருள் வெடிமருந்துடன்
கலந்திருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு
ஏற்பட்டுள்ளது.