Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 147 பேர் கொரோனாவால் பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 147 பேர் கொரோனாவால் பாதிப்பு

By: Monisha Sat, 12 Sept 2020 10:40:48 AM

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 147 பேர் கொரோனாவால் பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே 9,151 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 147 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 519 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 91 ஆயிரத்து 571 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பரவியவர்களில் சிகிச்சைக்கு பின் 4 லட்சத்து 35 ஆயிரத்து 422 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 238 ஆக அதிகரித்துள்ளது.

district,corona virus,infection,death,treatment ,விழுப்புரம் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

அதிகபட்சமாக சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, கோவை, கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் தென் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்றுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,151-ஆக இருந்தது. 8,234 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 832 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 85 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 147 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,298-ஆக உயர்ந்துள்ளது.

Tags :
|