Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிவர் புயலால் பாதிக்கப்படும் மாவட்டங்களுக்கு காவல்துறை அதிகாரிகள் நியமனம்

நிவர் புயலால் பாதிக்கப்படும் மாவட்டங்களுக்கு காவல்துறை அதிகாரிகள் நியமனம்

By: Monisha Tue, 24 Nov 2020 2:13:59 PM

நிவர் புயலால் பாதிக்கப்படும் மாவட்டங்களுக்கு காவல்துறை அதிகாரிகள் நியமனம்

நிவர் புயலால் பாதிக்கப்படும் 12 மாவட்டங்களுக்கு நிவாரண உதவி மற்றும் கண்காணிப்பு பணிகளுக்கு காவல்துறை உயர் அதிகாரிகளை தமிழக போலீஸ் டிஜிபி திரிபாதி நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
சென்னைக்கு செயலாக்க பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குநர் விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மற்ற 12 மாவட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் விவரம் வருமாறு:- காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஐ.ஜி அன்பு நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் ரெயில்வே பிரிவு ஐ.ஜி. வனிதா நியமிக்கப்பட்டுள்ளார்.

nivar,vulnerability,district,police,officers ,நிவர்,பாதிப்பு,மாவட்டம்,காவல்துறை,அதிகாரிகள்

விழுப்புரம் மாவட்டத்திற்கு பயிற்சி பிரிவு டி.ஐ.ஜி. சத்ய பிரியா நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டத்திற்கு வடக்கு சரக டி.ஐ.ஜி. நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு பயிற்சி பிரிவு ஐ.ஜி. சாரங்கன் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.ஐ.ஜி. லலிதாலட்சுமி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு தலைமையக டி.ஐ.ஜி. செந்தில்குமாரி நியமிக்கப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்திற்கு ஆயுத படை ஐ.ஜி. தமிழ் சந்திரன் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மத்திய சரக ஐ.ஜி. ஜெயராமன் ஆகியோர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags :
|
|