Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை மாநகராட்சியில் 350 மியாவாக்கி பூங்காக்கள் அமைக்க ஏற்பாடு

சென்னை மாநகராட்சியில் 350 மியாவாக்கி பூங்காக்கள் அமைக்க ஏற்பாடு

By: Monisha Sun, 20 Dec 2020 1:11:40 PM

சென்னை மாநகராட்சியில் 350 மியாவாக்கி பூங்காக்கள் அமைக்க ஏற்பாடு

சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு மண்டலங்களில், மியாவாக்கி எனப்படும் ஜப்பானிய முறையில் அடர்ந்த காடுகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 25 வகையான, 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. இந்த விழாவில் மாநகராட்சி கமிஷனர் கோ. பிரகாஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

நிகழ்ச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மாநகராட்சி கமிஷனர் கோ. பிரகாஷ் கூறியதாவது:- பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், ஆயிரம் இடங்களில் ‘மியாவாக்கி’ எனப்படும் அடர்வன காடுகள் உருவாக்குவதே எங்களின் இலக்கு. இதற்காக சென்னையில் வார்டு வாரியாக திறந்த வெளி நிலங்கள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. கணக்கீடு செய்யப்பட்ட நிலங்களை ஒழுங்கு முறைப்படுத்தி, அடர்வனக்காடு உருவாக்குவதற்கு பட்டியல் தயார் செய்து வைத்துள்ளோம். மேலும், பல்வேறு இடங்களிலும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

miyawaki,park,interview,work,forests ,மியாவாக்கி,பூங்கா,பேட்டி,பணி,அடர்வனக்காடுகள்

மண்டல துணை கமிஷனர்கள், வட்டார துணை கமிஷனர்கள், மண்டல அலுவலர்கள் இது தொடர்பாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, மியாவாக்கி அல்லாத, 675 பூங்காக்கள் உள்ளன. அந்தவகையில், பூங்காக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, சென்னையில் ஆயிரம் பூங்காக்கள் அமைப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கூடுதலாக 350 பூங்காக்கள் அமைக்கப்படுகிறது.

முதற்கட்டமாக நடப்பு நிதி ஆண்டில் 60 பூங்காக்கள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. நகர்புறங்கள் அதிக வெப்பமயமாதலை தடுப்பதற்காகவும், பொதுமக்கள் மாலை நேரங்களில் தங்களின் குடும்பத்தினருடன் ஆரோக்கியமாக பொழுதை களிப்பதற்காகவும், ஒரு சிறிய முயற்சியாக பூங்காக்கள் மற்றும் அடர்வனக்காடுகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த முயற்சியில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் எங்களுடன் இணைந்து சேவை செய்து வருகிறது.

ஒரு நகரம் நன்றாக இருக்க வேண்டும் என்றால், குறைந்தபட்சம் 33 சதவீதம் மரங்கள் நிறைந்து காணப்பட வேண்டும். சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில், கூவத்தின் இரு கரையோரங்களிலும், நேப்பியர் பாலம் முதல் பருத்திப்பட்டு வரையிலும், ரூ.36 கோடி செலவில், பல லட்சக்கணக்கான நாட்டு மரங்கள் நடும் பணி கூடிய விரைவில் தொடங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Tags :
|
|