Advertisement

அசாமை உலுக்கி வரும் கனமழை, வெள்ளம்; 97 பேர் பலி

By: Nagaraj Fri, 17 July 2020 8:59:53 PM

அசாமை உலுக்கி வரும் கனமழை, வெள்ளம்; 97 பேர் பலி

அசாமை ஆட்டம் காண வைத்துள்ளது கனமழை. தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மொத்தம் 97 பேர் பலியாகி உள்ளனர். 40 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

அசாமில் பருவமழை தொடங்கிவிட்டது. இடைவிடாத கனமழையால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட பல ஆறுகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. அதன் காரணமாக பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

97 killed,assam,continuous rains,brahmaputra,floods ,97 பேர் பலி, அசாம், தொடர் மழை, பிரம்மபுத்திரா, வெள்ளம்

மழை, வெள்ளத்துக்கு 27 மாவட்டங்கள் வரை பாதிக்கப்பட்டு உள்ளன. கடந்தாண்டை விட தற்போது அதிக பாதிப்பாகும். வீடுகள், கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் வேறு இடங்களுக்கு தஞ்சம் தேடி செல்கின்றனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அசாமில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இதுவரை 97 பேர் பலியாகி உள்ளனர். 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களுக்காக மொத்தம் 303 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கே உள்ளவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் பணிகளில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.

Tags :
|