வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதிக்காவிட்டால் பாஜக போராட்டம் நடத்தும்; எச். ராஜா
By: Monisha Fri, 06 Nov 2020 10:49:26 AM
வெற்றிவேல் யாத்திரைக்கு காவல் துறை அனுமதிக்காவிட்டால் பாஜக போராட்டம் நடத்தும் என்று எச். ராஜா கூறியுள்ளார்.
பா.ஜ.க. சார்பில் இன்று திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து வெற்றிவேல் யாத்திரை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பா.ஜ.க.வினர் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பா.ஜ.க.வினரின் வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
தமிழக அரசு சார்பில் பா.ஜ.க.வினரின் வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கவில்லை என்று நேற்று தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து திருத்தணியில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். இதையடுத்து வேல் யாத்திரை தொடங்க உள்ள நிலையில் பாஜக நிர்வாகிகள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் எச். ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: - காவல் துறை அனுமதித்தால் பாஜக வேல் யாத்திரையை நடத்தும். இல்லையெனில் போராட்டம் நடத்தும்.
இந்துக்களை இகழ்வாக பேசும் மு.க.ஸ்டாலின் போன்றவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவே வேல் யாத்திரை என்று கூறினார்.