Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1-வது அணு உலையில் கோளாறு; மின் உற்பத்தி பாதிப்பு

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1-வது அணு உலையில் கோளாறு; மின் உற்பத்தி பாதிப்பு

By: Monisha Tue, 15 Dec 2020 11:32:31 AM

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1-வது அணு உலையில் கோளாறு; மின் உற்பத்தி பாதிப்பு

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஒன்றாவது அணு உலையில் நேற்று காலை 11.15 மணியளவில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதன் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

koodankulam,nuclear power plant,nuclear reactor,malfunction,power generation ,கூடங்குளம்,அணுமின் நிலையம்,அணு உலை,கோளாறு,மின் உற்பத்தி

அணு உலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்படும் என அணுமின் நிலைய வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, கடந்த 9-ம் தேதி இரண்டாவது அணு உலையில் டர்பனில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பின்னர் பழுது சரி செய்யப்பட்டு தற்போது 760 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :