Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையில் பேருந்து போக்குவரத்து

நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையில் பேருந்து போக்குவரத்து

By: Nagaraj Sun, 06 Sept 2020 2:13:38 PM

நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையில் பேருந்து போக்குவரத்து

நாளை முதல் தொடக்கம்... தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து நாளை முதல் தொடங்க உள்ளது.

ஊரடங்கு தளர்வுகளையடுத்து கடந்த ஒன்றாம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்துகள் ஓடத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் நாளை முதல் அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

corona,district,bus,permit,from tomorrow ,கொரோனா, மாவட்டம், பேருந்து, அனுமதி, நாளை முதல்

நீண்ட தூரம் செல்லும் அரசுப் பேருந்துகளுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு முக்கிய பணி மற்றும் வியாபார நிமித்தமாக சென்று வர இ-பாஸ் முறையும் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பின்னர் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் தற்போது மாவட்டங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|
|