Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எம்ஜிஆர் போல் விஜய்யை உருவகப்படுத்தி போஸ்டர் ஒட்டிய ரசிகர் மீது வழக்குப்பதிவு

எம்ஜிஆர் போல் விஜய்யை உருவகப்படுத்தி போஸ்டர் ஒட்டிய ரசிகர் மீது வழக்குப்பதிவு

By: Nagaraj Sun, 06 Sept 2020 6:58:24 PM

எம்ஜிஆர் போல் விஜய்யை உருவகப்படுத்தி போஸ்டர் ஒட்டிய ரசிகர் மீது வழக்குப்பதிவு

எம்.ஜி.ஆரின் மறு உருவமே என்று விஜய்யை சித்தரித்து போஸ்டர் ஒட்டிய ரசிகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சமீப காலமாக நடிகர் விஜய் ரசிகர்கள் ஒட்டும் போஸ்டர் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்துகிறது. அன்மையில் எம்ஜிஆர் போன்று விஜயையும், ஜெயலலிதா போன்று விஜய் மனைவியையும் சித்தரித்து ரசிகர்கள் போஸ்டர் ஒட்டினர்.

அதன் பின்னர் எம்ஜிஆர் திரைப்படங்களில் தோன்றிய கதாபாத்திரங்களில், விஜயை சித்தரித்து ரசிகர்கள் தேனியில் போஸ்டர் ஒட்டினர். இதனை பார்த்த எம்ஜிஆர் ரசிகர்கள் தலையில் அடித்தப்படி செல்கின்றனர். பொதுமக்களில் சிலர் இதை ரசித்து பார்க்கின்றனர். பலர் முகத்தை சுளித்து செல்கின்றனர்.

vijay fan,poster,case,theni,madurai ,விஜய் ரசிகர், போஸ்டர், வழக்குப்பதிவு, தேனி, மதுரை

அந்த போஸ்டரில், விஜய் தமிழகத்திற்கு தலைமையேற்க வேண்டும் என்றும் 2021ல் உங்கள் வரவை காணும் தமிழகம் என்ற வாசகங்கள் இடம்பிடித்திருந்தன.

இந்த போஸ்டர் குறித்து புகார் எழுந்த நிலையில் போஸ்டர் ஒட்டப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் கிழிக்கப்பட்டது. மேலும், போஸ்டர் ஒட்டியது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் விஜய் ரசிகர் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags :
|
|
|