Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கொரோனா தொற்று குறித்து ஆய்வு நடத்த மத்திய குழு நாளை சென்னை வருகை

தமிழகத்தில் கொரோனா தொற்று குறித்து ஆய்வு நடத்த மத்திய குழு நாளை சென்னை வருகை

By: Monisha Tue, 07 July 2020 2:23:12 PM

தமிழகத்தில் கொரோனா தொற்று குறித்து ஆய்வு நடத்த மத்திய குழு நாளை சென்னை வருகை

தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 978 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 833 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 66 ஆயிரத்து 571 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,571 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக மத்திய குழு நாளை மாலை சென்னை வர உள்ளது. இந்த குழுவினர் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் சென்னை வர உள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா தலைமையிலான இந்த குழு, தமிழகத்தில் தொற்று பரவல், கொரோனா தொற்றால் உயிரிழப்பு, கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு நடத்த உள்ளது. அத்துடன் கொரோனா நிலவரம் குறித்து முதலமைச்சர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன் ஆகியோருடன் மத்திய குழு ஆலோசனை மேற்கொள்கிறது.

Tags :
|