Advertisement

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

By: Monisha Mon, 03 Aug 2020 3:56:38 PM

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நிலவும் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

தென்மேற்கு பருவக்காற்றால் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூரில் மழை பெய்யலாம்.

coimbatore,nilgiris,rain,weather,monsoon ,கோவை,நீலகிரி,கனமழை,வானிலை,பருவக்காற்று

தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால் 4 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்த இடங்களின் விவரம் வருமாறு:-
தோவாலா - 15 செ.மீ.
அவலாஞ்சி - 10 செ.மீ.
கூடலூர் - 9 செ.மீ.
பந்தலூர் - 8 செ.மீ. இவ்வாறு வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|