சென்னை- பெங்களூர் இடையே 23ம் தேதி முதல் சிறப்பு ரயில்; தெற்கு ரயில்வே அறிவப்பு
By: Nagaraj Wed, 21 Oct 2020 10:20:17 AM
தெற்கு ரயில்வே அறிவிப்பு... சென்னை சென்டிரல் மற்றும் பெங்களூரு இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் வருகின்ற 23ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;
"கேஎஸ்ஆர் பெங்களூரு-சென்னை எம்ஜிஆர் சென்டிரல் இடையே இயக்கப்படுகின்ற
ஏசி அதிவிரைவு சிறப்பு ரயில் வருகின்ற 23 ஆம் தேதி முதல் செவ்வாய் கிழமையை
தவிர வாரத்தில் மற்ற ஆறு நாட்களிலும் பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து
காலை 6 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
அதே சிறப்பு ரயில் சென்னையில்
இருந்து பெங்களூரு இடையே வருகின்ற இருவத்தி மூன்றாம் தேதி முதல்
செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்களிலும் சென்ட்ரல் ரயில்
நிலையத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும்" என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.