Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை ராயபுரத்தில் மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை ராயபுரத்தில் மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

By: Monisha Mon, 14 Dec 2020 12:20:30 PM

சென்னை ராயபுரத்தில் மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனையை விரைவாக மேற்கொள்ள இரண்டாயிரம் மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை சென்னை ராயபுரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 200 மினி கிளினிக்குகள் அமைகிறது. முதற்கட்டமாக, 47 இடங்களில் இது அமைக்கப்படுகிறது. 20 இடங்களில் இன்று முதல் முதல் செயல்படத் தொடங்குகிறது. இந்த மினி கிளினிக்குகள் காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும். கிராமப்புறங்களில் மட்டும் மாலை 7.00 மணி வரை திறந்திருக்கும். இந்த மினி கிளினிக்கில் ஒரு டாக்டர், ஒரு நர்சு, ஒரு மருத்துவ பணியாளர்கள் இருப்பார்கள்.

mini clinic,initiative,chief minister,corporation,treatment ,மினிகிளினிக்,துவக்கம்,முதலமைச்சர்,மாநகராட்சி,சிகிச்சை

தற்போது தமிழ்நாட்டில் 1,851 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கிறது. 8 கி.மீ. தூரத்திற்கு ஒரு ஆஸ்பத்திரியும் உள்ளது. இந்த மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்ட பிறகு, 3 கி.மீ. க்கு ஒரு ஆஸ்பத்திரி இருக்கும். இங்கு, காய்ச்சல், தலைவலி போன்ற எளிதான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன், கொரோனா தொற்று இருக்கிறதா என்பதையும் கண்டறிந்து நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக பெரிய மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

தொடர்ந்து, வரும் 16-ந்தேதி சேலம் மாவட்டம் எடப்பாடியில், அந்த மாவட்டத்துக்குரிய 40 மினி கிளினிக்குகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். தொடர்ந்து எல்லா மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைக்கிறார்கள். இந்த மாத இறுதிக்குள் இரண்டாயிரம் மினி கிளினிக்குகளையும் தமிழகம் முழுவதும் திறக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

Tags :